Tuesday, May 18, 2021

வாழை தண்டு மருத்துவ பயன்கள்


வாழை தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

வாழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வரை வாழை தரக்கூடிய பயன்கள் ஏராளம். வாழை மரத்தின் தண்டு பொரியல், கூட்டு செய்து சாப்பிடப் பயன்படுவது. ஆனால், வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால், பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்.

உடல் எடையைக் குறைக்க உடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு வழிகளைப் பின்பற்றுவார்கள். ஆனால் வாழைத்தண்டு சாறு குடிப்பதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும். வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரும். வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால், அதிகமாகப் பசி எடுக்காது. அதனால் கண்ட நேரங்களில் நொறுக்குத் தீனி சாப்பிடுவது குறையும். தொப்பையைக் குறைக்க நார்ச்சத்து கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை வேகமாகக் கரைக்கும். வாழைத்தண்டுடன் இஞ்சி சாறினையும் சேர்த்து வாரத்துக்கு இரண்டு முறை வந்தால், நல்ல பலன் கிடைக்கப் பெறலாம். அசிடிட்டி சிலருக்கு லேசான உணவுகள் சாப்பிட்டாலும், சிலருக்கோ என்ன சாப்பிட்டாலும் ஜீரணமே ஆவதில்லை. அடிக்கடி ஜீரணக் கோளாறால் அவதிப்படுகிறவர்கள் வாழைத்தண்டினை சமைத்தோ, சாறாகவோ சாப்பிட்டு வர, விரைவில் பலன் உண்டாகும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதால், உணவு ஜீரணமாவதற்கான அமிலங்கள் சரியான முறையில் உற்பத்தியாகும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும். உணவு செரிமானச் சக்தி அதிகரிக்கும்.

சிறுநீரகக் கற்களை வெளியேற்றலாம். சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீரகப் பாதையை தூய்மைப்படுத்த

சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்றுகளை நீக்கி, சிறுநீரகப் பாதையை சுத்தமாக்கும். வாரத்துக்கு மூன்று முறை இதன் சாற்றைக் குடித்துவந்தால், சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று (Urinary Tract Infections) நீங்கும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.


சர்க்கரை நோயைக் வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து.

வாழைத்தண்டு சர்க்கரை நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். நம்முடைய உடலில் சுரக்கின்ற இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதிலுள்ள துவர்ப்பு சுவை தான் சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்தாக அமைகிறது. சிறுநீரகம் பழுதடையாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், முதலில் நம்முடைய உடலின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ரத்தசோகையைக் குணமாக்க

கீரை, பேரிச்சம்பழம், முருங்கை போன்ற இரும்புச்சத்துடைய உணவுகள் நிறைய இருந்தாலும், சிலருக்கு ரத்தசோகை வந்துவிடுவதுண்டு. வாழைத்தண்டில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் பி6 ம் அதிக அளவில் இருக்கிறது. அதனால் ரத்தத்தில் ஹீமாகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை குணமாக்குகிறது.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும்.

பெண்களுக்கு வாழை தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

மாதவிடாய் கோளாறுகள்

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும்.
வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும்.

பீட்ரூட்டின் வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

 


பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்


Benefits of beetroot in Tamil

பூமிக்கு அடியில் வளரும் வகையை சார்ந்த பீட்ரூட் ஆனது தன்னுள் பல்வேறு அற்புதங்களை அடக்கியது. பீட்ரூட் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தரும் என்பதை இங்கே பார்க்கலாம்.


கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், ரத்த சோகையை சரிப்படுத்தும், பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லது. 

ஆண்மையை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸாக உள்ளது.பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், ஆண்மை குறைவிற்கு காரணமாக அமையும். இந்த தருணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொண்டால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொண்டு ஆண்மை பிரச்சனை வராமல் இருக்கும்.பீட்ரூட்டை மிச்சியில் போட்டு அரைத்து அதனை அப்படியே சாப்பிட பிடிக்காது. இதன் உடன் ஆப்பிள், ஆரஞ்சு, இஞ்சி இதில் ஏதாவது ஒன்றை அதனுடன் சேர்ந்து ஜூஸாக எடுத்துக் கொண்டால் மிக சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் இதனுடன், வெஜிடேபல்ஸ், கேரட், முள்ளங்கி இதில் எதாவது ஒன்றுடன் சேர்ந்து சாப்பிடலாம்.

பீட் ஜூஸ் தினமும் எடுத்துக் கொள்ளும் போது, சர்க்கரை நோய் உள்ளவர்கள், சுகர் அளவை அடிக்கடி செக் செய்துக் கொள்வது நல்லது. பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும். 

மார்பக  புற்றுநோயை தடுக்கும் 

பீட்ரூட் ஜூஸ் மார்பக புற்றுநோய்களைத் தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

பீட்ரூட்டில் பெட்டானின் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதே போல, வாஷிங்டன் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய்களை தடுக்கும் திறன் கொண்டுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. பீட்ரூட் ஜூஸ் உடன்  கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளும்போது,  . ​​ரத்த புற்று நோயை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயைத் தடுக்கும் என்பதும் இதற்கு முக்கிய காரணமாக பீட்ருட்டில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பொருள், கேன்சர் செல்லை அழிப்பதாக கண்டறியப்பட்டள்ளது.  இதன் சிவப்பு வன்ணத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், புற்றுநோயுடன் போராடும் வல்லமைகொண்டது.


பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
 
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

கர்ப்ப காலம்.

ஒரு பெண்ணின் வாழ்வில் கர்ப்ப காலம் என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். இக்காலத்தில் உண்ணும் உணவுகளின் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக பீட்ரூட் சாப்பிடுவதில் கவனம் தேவை. ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் தீங்கு விளைவிக்கக்கூடியவை. ஆகவே பிரசவம் முடியும் வரை பீட்ரூட் ஜூஸை குடிக்காமல் இருப்பதே நல்லது. வேண்டுமானால் எப்போதாவது ஒருமுறை பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிடலாம்.

கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால், பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடிக்காதீர்கள். வேண்டுமானால், அளவாக எப்போதாவது ஒருமுறை குடிக்கலாம்.

சுத்தமான பீட்ரூட் ஜூஸ் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை பலவீனமாக இருப்பவர்கள் அல்லது குமட்டல் உணர்வு கொண்டவர்கள் குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

Thursday, January 14, 2021

எலுமிச்சை மருத்துவ பயன்கள்


எலுமிச்சை ருத்துவ பலன்கள் நிறைந்த அதிசயக்கனி

எலுமிச்சை எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது.
புளிப்பு சுவையுள்ளவை ஜீரணத்தை தூண்டி உணவை நன்கு செரிக்க செய்யும். உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மையும், புளிப்பு சுவைக்கு உண்டு. எலுமிச்சை புளிப்பு சுவையுடையதாக இருந்தாலும், இதில் காரத்தன்மையும் இருக்கிறது. அதனால் ரத்தத்தை தூய்மை செய்யும் சிறப்பு இதில் இருக்கிறது.
எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன.
எலுமிச்சை பழத்தில் உள்ள ``சிட்ரிக் அமிலம்'' நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாக இருப்பதால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளுக்கு நல்ல மருந்தாகிறது. எலுமிச்சை சாறுக்குபித்தநீரை சுரக்கும் தன்மை உண்டு. அதனால் காமாலை நோய் களுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது.
வாய் துற்நாற்றம் இருக்கிறதா? பல்லிலும் ஊனிலும் சிக்கல்கள் இருக்கின்றனவா? எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு மஸாஜ் செய்யுங்கள். பல்லுக்கும், பல் சார்ந்த இத்தகைய நோய்களுக்கும் எலுமிச்சைப் பழச்சாறு நல்ல மருந்து
ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும் சக்தி எலுமிச்சை சாறுக்கு உள்ளதால் மூக்கில் ரத்தம் வடிதல், மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு போன்ற நிலைகளில் இது பலனளிக்கிறது.
உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச் சைக்கு உண்டு. இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம், நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும். மலை ஏற்றம் செல்பவர்கள், எலுமிச்சம் சாற்றை நீரில் கலந்து குடித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும், களைப்பு நீங்கும். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும். அதனால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும், மன பதட்டம் கொண்டவர்களும் எலுமிச்சை சாறில் நீர் கலந்து பருகலாம்.
கழிவுகளை வெளியேற்றும் தன்மை வாய்ந்ததால் முக பருவால் துன்பப்படும் இளம் பருவத்தினர், ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 சிட்டிகை மிளகு தூள், 2 தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும். இதனால் ரத்தத்தில் காரத் தன்மை அதிகரிக்கும். அதை தொடர்ந்து கழிவுகள் வெளியேறி, ரத்த ஓட்டம் சீர்படும். முகப்பரு போன்றவைகளும் மறையும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச் சிக்கல் நீங்கும். உடல் புத்துணர்ச்சி பெறும்.
நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுப்பவர்கள் பருகும் நீரில், 1 கப்புக்கு 1 தேக்கரண்டி என்ற அளவில் எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி குடித்து வந்தால், ரத்தத்தின் காரத்தன்மை அதிகரித்து நோய் பாதிப்பு விரைவில் சீராகும். உடலுக்கு புத்துணர்ச்சியும் மனதிற்கு தெளிவும் கிடைக்கும்.
கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, சொறி, சிறங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்களிலிருந்து விடுபட எலுமிச்சை சாற்றை உடலில் தேய்த்து சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்றிருந்துவிட்டு பின்பு குளிக்கவேண்டும். கோடை காலத்தில் உடல் புத்துணர்ச்சி பெற குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, குளிக்க வேண்டும்.
எலுமிச்சையை மழை, கோடை, பனி போன்ற எல்லா காலங்களிலும் உபயோகிக்கலாம். எலுமிச்சை சாறை காய்கறிகளில் கலந்து சாலட் ஆக செய்யும் பொழுது, அந்த காய்கறிகளின் சத்து அதிகரிக்கிறது.

எலுமிச்சை தோலில் உள்ள சத்துக்கள்

எலுமிச்சை ஜூஸில் மட்டும் சத்துக்கள் இல்லை. அதன் தோள்களிலும் நிறைய சத்துக்கள் இருக்கிறது. எலுமிச்சை சாற்றில் 138 மில்லி கிராம் அளவிற்கு பொட்டாசியம் உள்ளன.

எலுமிச்சை சாற்றை விட அதன் தோல்களில் 160 மில்லி கிராம் பொட்டாசியம் இருக்கிறது. எலுமிச்சை தோலில் வைட்டமின் சி 129 மில்லிகிராம் அடங்கியிருக்கு. எலுமிச்சை சாற்றில் மிகவும் குறைவான 53 மில்லிகிராம் அளவே இருக்கிறது.

எலுமிச்சை தோலில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும். எலுமிச்சை தோலை முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு காயம் விரைவில் ஆறாது. அதற்கு இந்த எலுமிச்சை தோலை காயம் பட்ட இடத்தில் தேய்த்து வருவதால் காயங்கள் விரைவில் குணமடையும்.

சர்க்கரை உடலில் குறைவாக இருக்க எலுமிச்சை இலை டீ குடித்து வந்தால்  உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படும்.

எலுமிச்சம் பழம் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.

மஞ்சள் மருத்துவ குணங்கள்

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளின் பயன்கள்

நம் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் மஞ்சள் நீங்கா இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பெண்களின் வாழ்வில் பெரும் முக்கியத்துவத்தை வகிக்கிறது. இந்த மஞ்சள் பெண்களின் அழகை மெருகேற்றுவதற்கு மட்டுமல்ல, இதில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ நன்மைகள் ஆண்களுக்கு சமமாகும்.
மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும் (Antiseptic). உடலில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள், மற்றும் புண்களில் மஞ்சள் சிறந்த மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதா (Ayurveda), பாரம்பரிய சீன மருத்துவம் (Traditional chinese Medicine) எனப் பல மருத்துவ முறைகளில் மஞ்சள் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் E, நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), இரும்பு, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் (ஜிங்க்) போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், பல்வேறு வகைகளில் உடலுக்கு நன்மையளிக்கிறது.
முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு.
கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்றுவலி தீரும். பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும் நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை உண்டாக்கும். கஸ்தூரி மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய, சில நிமிடங்களில் தலைவலி பறந்துபோகும்.
மஞ்சளில் இரு வகைகளில் ஒன்றை சமையலுக்கு பயன்படுத்துவோம், மற்றொன்று முகத்தில் பூசுவதற்கான மஞ்சள் ஆகும். சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.
உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.
கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.
வெறும் வயிற்றில் மஞ்சள் உட்கொள்வது வயிற்றை சுத்தம் செய்யும் முறை.
மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கும்.
மஞ்சளை சிறிது எலும்பிச்சை சாறில் தேய்த்து முகத்தில் பருக்கள் உண்டாகும் இடத்தில் தடவினால் ஆரம்பத்திலேயே பருக்கள் உண்டாவதாகி தடுக்கலாம்.
மஞ்சளுடன் சிறிது வேப்பிலை அரைத்து தேய்த்தால் அம்மையால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
மஞ்சளுடன் சிறிது வேப்பிலை மற்றும் வசம்பு சேர்த்து அரைத்து தேய்த்தால் மேகப்படை, வட்டமான படைகள் மற்றும் விஷக்கடிகள் குணமாகும்.
மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் போன்றவை குணமாகும்.


 

சேனைக்கிழங்கு மருத்துவ பயன்கள்

சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கு வெறும் காய்கறி மட்டுமல்ல! எடையிழப்பு, அழற்சி எதிர்ப்பு பண்பு என எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது,கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடியது.

சேனைக்கிழங்கு அல்லது யாம் (Elephant Foot Yam) மருத்துவ குணங்கள் நிறைந்த கிழங்கு வகைகளில் ஒன்றாகும்.

இது ஆயுர்வேதம், சித்தா, மற்றும் யுனானி போன்ற பல மருத்துவ பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இது அறிவியல் ரீதியாக அமோர்போபாலஸ் பியோனிஃபோலியஸ் (Amorphophallus paeoniifolius) என்று அழைக்கப்படுகிறது.

கொழுப்பைக் குறைத்தல் சேனைக் கிழங்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. இது ஒரு மெலிதான உணவாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஒமேகா-3-கொழுப்பு அமிலங்கள் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகின்றன, அதே நேரத்தில் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதங்கள் மற்றும் மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதங்களின் அளவைக் குறைக்கின்றன. சேனைக் கிழங்கு 0.2-0.4% கொழுப்பு மற்றும் அதிக அளவாக 1.7-5% நார்சத்துக்களைக் கொண்டுள்ளது, இது எடை குறைக்கும் செயல்பாட்டில் ஒரு சிறந்த உணவாக உள்ளது.

உறைவு எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஒரு பயனுள்ள உறைவு எதிர்ப்பு மருந்தாக சேனைக் கிழங்கு செயல்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது. இது தமனிகள் மற்றும் நரம்புகளில் உருவாகும் கட்டிகளை அகற்றவும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் கரோனரி தமனி நோய் போன்ற சிக்கல்களைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும்.

புற்றுநோய் தடுப்பு சேனைக் கிழங்கில் நார்ச்சத்து நிறைந்திருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, எனவே பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதில் இது மிகவும் நன்மை பயக்கும். கூடுதலாக, இந்த காய்கறியில் வைட்டமின் ஏ உள்ளடக்கமும் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் நுரையீரல் மற்றும் பற்குழி புற்றுநோய்களைத் தடுப்பதில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோய் சேனைக் கிழங்கு குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் (low glycemic index) கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனவே நீரிழிவு நோயாளிகள் இரத்த-சர்க்கரை அபாயம் இருந்தாலும் இந்த காய்கறியை எந்த பயமும் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம்.

நச்சுத்தன்மை இது ஒரு சக்திவாய்ந்த போதைப்பொருள் எதிர்ப்பான் ஆகும். சேனைக் கிழங்கில் உள்ள அதிக நார்ச்சத்து கல்லீரலில் நச்சுத்தன்மை எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. சேனைக் கிழங்கு ஹெபடோ-பாதுகாப்பு நடவடிக்கைக்கு மிகவும் பிரபலமானது. இது குடல் மற்றும் வயிறு உள்ளிட்ட பிற உள் உறுப்புகளை முறையாக சுத்தப்படுத்த உதவுகிறது, மேலும் அவை நோய்க்கிருமிகள் இல்லாதவை.

அழற்சி எதிர்ப்பு கீல்வாதம் சிகிச்சையிலும் இது பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது தசைப்பிடிப்பைக் குறைக்க உதவுகிறது. அதன் அழற்சி எதிர்ப்பு செயல்பாட்டின் பிற பயன்பாடுகளாக வாத நோய், யானை கால் நோய், சுரப்பி வீக்கம் மற்றும் பிறவற்றில் பயனுள்ளதாக இருக்கும்.
நினைவகம் மற்றும் செறிவு ஒமேகா-3-கொழுப்பு அமிலங்கள் மற்றும் துத்தநாகம், செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சேனைக் கிழங்கு போன்ற அத்தியாவசிய தாதுப்பொருட்களின் வளமான மூலமாக இருப்பது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது மற்றும் நினைவகம் மற்றும் செறிவை மேம்படுத்தவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சேனைக் கிழங்கின் நார்ச்சத்து உள்ளடக்கங்கள் புரோபயாடிக்குகளுக்கான சிறந்த சேர்ப்பு பொருட்கள் ஆகும். இது உடலில் இருந்து நச்சுகள் மற்றும் நோய்க்கிருமிகளை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த நல்ல பாக்டீரியாக்களையும் உருவாக்குகிறது. சேனைக் கிழங்கில் பாக்டீரியா எதிர்ப்பு முகவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது, இது தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. இது பரந்த சைட்டோடாக்ஸிக் மற்றும் நோயெதிர்ப்பு-மாடுலேட்டரி செயல்பாடுகளையும் காட்டுகிறது.

மூல நோய் குணப்படுத்துகிறது மூலம் உண்மையில் மிகவும் வேதனையானவை. இது முக்கியமாக நாள்பட்ட மலச்சிக்கல், அதிக சிரமம், அதிகமாக உட்கார்ந்து இருத்தல், காரமான, எண்ணெய் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படுகிறது. மூல நோய்க்கு வேறு பல காரணங்களும் உள்ளன. சேனைக் கிழங்கு பயன்படுத்துவதன் மூலம் இந்த சிக்கலை நீங்கள் குணப்படுத்தலாம். நீங்கள் செய்ய வேண்டியது சேனைக் கிழங்கு சிறிய மற்றும் மெல்லிய துண்டுகளாக வெட்டி சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும். அவற்றில் இருந்து ஒரு தூள் தயாரிக்கவும். இந்த தூளை அரை முதல் ஒரு டீஸ்பூன் தினமும் இரண்டு முறை தண்ணீரில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வேதனையான சிக்கலைத் தடுக்க நீங்கள் ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு பட்டியலை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குளிரூட்டும் விளைவுகள் சேனைக் கிழங்கு உடலில் குளிரூட்டும் விளைவைக் காட்டுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, மேலும் தமனிகள் மற்றும் நரம்புகள் முழுவதும் இரத்தத்தை சீராக செல்ல உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் குறிப்பாக உடலை குளிர்வாக வைத்திருக்க வெப்பமான பகுதிகளில் உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. சேனைக் கிழங்கினை நரம்பு மண்டல மனச்சோர்வு செயல்பாட்டிற்கு பயன்படுத்தலாம், இதன் விளைவாக மயக்கம் மற்றும் லோகோ மோட்டார் செயல்பாடு குறைகிறது.

செரிமானத்திற்கு நல்லது சேனைக் கிழங்கை தவறாமல் சாப்பிடுவது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இந்த கிழங்கு பிடிப்பு எதிர்ப்பு (ஆன்டிஸ்பாஸ்மோடிக்), அழற்சி எதிர்ப்பு, இரைப்பைக் குடல் வலி நீக்கம், பசியின்மை கோளாறு, செரிமான மற்றும் வயிற்று வலி போன்றவற்றிற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த விளைவுகள் செரிமானம் மற்றும் பசியை மேம்படுத்த உதவுகின்றன. இந்த காய்கறி வயிற்றுப் பிடிப்பு, வாய்வு, வீக்கம், வயிற்றுப்போக்கு, புழுவினால் ஏற்படும் தொற்று, புண்கள், அதிகப்படியான வயிற்று அமிலம் மற்றும் வயிறு தொடர்பான பல பிரச்சினைகளை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். சேனைக் கிழங்கினை வழக்கமாக எடுத்துக்கொள்வது மலச்சிக்கல், ஒழுங்கற்ற குடல் அசைவுகள், வயிற்றுப்போக்கு மற்றும் மூலம் உள்ளிட்ட பல்வேறு வகையான இரைப்பை குடல் பிரச்சினைகளைப் போக்க உதவும்.
கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.

பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது. கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கில் புரதம், தாது உப்புகள், மாவுச்சத்து, வைட்டமின் ஏ, ரைபோஃபிளவின், கால்சியம், இரும்பு, தயாமின், நிகோடினிக்கும் உள்ளன. உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.

இதில் உள்ள கால்சியம்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது. 'பி' குரூப் மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.
 
100 கிராம் சேனைக்கிழங்கு பின்வரும் ஊட்டச்சத்தை வழங்குகிறது.

  • கலோரிகள்: 118 கலோரிகள்
  • நீர்ச்சத்து: 66 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள்: 25 கிராம்
  • கொழுப்பு: 1.5 கிராம்
  • புரதம்: 9.81 கிராம்
  • நார்ச்சத்து: 5.7 கிராம்
  • பொட்டாசியம்: 1208 மிகி
  • கால்சியம்: 20 மிகி
  • இரும்பு: 1.8 மிகி
  • மெக்னீசியம்: 82 மிகி
  • சோடியம்: 14.2 மிகி
  • துத்தநாகம்: 2 மிகி
  • தாமிரம்: 0.3 மிகி

சுக்குட்டிக் கீரையின் மருத்துவ பயன்கள்

மணித்தக்காளி / மணத்தக்காளி கீரையின் பயன்கள்

மணித்தக்காளி கீரையின் தண்டு, கீரை,பழம், அனைத்தும் சமையல் மற்றும் மருத்துவத்தில் பயன்படுகிறது. உடலுக்கு சத்துணவு பொருட்களை சரியாக அனுப்பிவிடுகிறது. மணத்தக்காளி கீரையில் போஸ்போரஸ், கால்சியும், இரும்புச்சத்து, வைட்டமின் "எ", "பி" உள்ளது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது.
பார்க்கும் இடங்களில் எல்லாம் தானாக முளைத்து வளரக்கூடிய ஒரு வகை சிறந்த மூலிகை மணித்தக்காளி செடி ,இது சுக்குட்டிக் கீரை என்றும் மிளகு தக்காளி கீரை என்றும் சில பகுதிகளில் அழைக்கப்படுகிறது.

மணித்தக்காளி / மணத்தக்காளி கீரையின் மருத்துவ நன்மைகள்:

வாய்ப்புண், வயிற்றுப்புண் இவைகளை குணப்படுத்துவதில் சிறந்தது. ஏனெனில் வயிற்றில் புண் ஏற்பட்டால்தான் வாயில் புண் வருகிறது. இதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் இரண்டுமே குணமாகிவிடும்.

சிறுநீரகம்

சிறுநீரக கோளாறுகளை சரி செய்து சீராக செயல் படுத்தும் வல்லமை கொண்டது மணத்தக்காளி. வாரம் ஒரு முறை சுக்கிட்டி கீரையை சாப்பிட்டு வந்தாலே இதற்க்கு போதுமானது. நீர் அதிகம் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

கல்லீரல்

கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. எனவே மஞ்சள் காமாலை உள்ளவர்கள் கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு மணத்தக்காளிக் கீரையை வேக வைத்து கஷாயம் போன்று தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் விரைவில் குணமடைய உதவி புரியும் அது மட்டுமல்ல மணத்தக்காளிக் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரத்த அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதை வாரம் இரண்டு முறை அதிக காரம் புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்

காச நோய், மூச்சு திணறல், கல்லீரல்

காச நோய் காச நோய் என்பது ஒரு வகையான கிருமி நமது உடலுக்குள் புகுந்து நுரையீரல்களில் அந்த உறுப்புகளை பாதித்து சுவாசிக்கும் பொழுது மூச்சுத்தினறல் வரட்டு இருமல் போன்றவற்றை ஏற்படுத்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் இவர்கள் தினம்தோறும் சிறிதளவு மணத்தக்காளிக் கீரை மற்றும் அதன் பழங்களை சாப்பிட்டு வந்தால் காச நோயின் தாக்கம் குறையும்
இந்த கொடிய நோயில் இருந்து நமக்கு விடுதலை வேண்டுமென்றால் மருத்துவமனை எல்லாம் போக தேவை இல்லை ஆரம்ப கால கட்டங்களில் இருந்தே மணத்தக்காளியை கீரையாகவோ அல்லது கொழம்பாகவோ சேர்த்து கொண்டால் நமக்கு இந்த நோயில் இருந்து விடுதலை கிடைக்கும். கல்லீரலுக்கு மிகவும் பலமூட்டும்.

புதிதாக கல்யாணம் ஆனவர்கள்

உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், கரு வலிமை பெறும். குறிப்பாக பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும். வலிமையான விந்தணு முக்கியமாக ஆண்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணு வலிமையுடன் இருக்கும்.

இதயம்

நெஞ்சு வலி மணத்தக்காளி கீரை மற்றும் பழத்தினை காய வைத்து, பொடி செய்து காலை மற்றும் மாலையில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு, இதயமும் வலிமையடையும்.
அடுத்ததாக நோய்வாய்ப்பட்டால் உடல் இளைத்தவர்கள் சுக்குட்டிக்கீரையை கொண்டு கஷாயம் செய்து தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும் அதேபோன்று மெலிந்த குழந்தைகளுக்கு மணத்தக்காளி கீரையை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொடுக்க குழந்தை நல்ல ஊட்டம் பெறும் அடுத்து ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் மிளகு பூண்டு திப்பிலி கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் சளி இருமல் நோய்கள் குணமாகும், கண்பார்வையும் தெளிவு பெறும்…
சுக்குட்டிக்கீரையை வாரம் இரண்டு முறை அதிக காரம் புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும், முக்கியமாக கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அலர்ஜியைப் போக்க முடியும் . மேலும் உடல் களைப்பை போக்கி நல்ல தூக்கத்தைக் கொடுக்கும் அதே போன்று மணத்தக்காளி வற்றல் 4 சுவை இன்மை வாந்தி வருவது போன்ற உணர்வு இவற்றைப் போக்க இந்த மணத்தக்காளி நல்ல பலன் கொடுக்கும் . எனவே கர்ப்பிணிப் பெண்கள் குறைந்த அளவில் தினமும் இந்த வற்றலை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்


அவரைக்காயின் மருத்துவ பயன்கள்

அவரை என்பது இருபுற வெடிக்கனி அல்லது லெகூம், பெபேசி குடும்ப வகையைச்சார்ந்த பயன்மிக்க ஒரு கொடிவகை நிலத்திணை(தாவரம்) ஆகும். இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி ஆகும். இதன் காயே அவரைக்காய் எனப்படுகிறது. இக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும்.[ இதில் புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). இதில் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus) ஆகும்.

100 கிராம் அவரைக் காயில் மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து உள்ளிட்டவை அடங்கி உள்ளது.

ஒரு கப் அவரைக்காயில் சராசரியாக ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் இரும்புச்சத்தில் 33மூ அளவு இருக்கின்றது. அவரைக்காயில் 10 கிராம் புரதச்சத்தும், குறைவான கொழுப்புச்சத்தும், தேவையான அளவு கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின்களும் உள்ளன.

அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.
அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இத் ரத்தத்தைச் சுத்தபடுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
சக்கரைநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இது சிறுநீரைப் பெருக்கும், சளி, இருமலைப் போக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம் தலைச்சுற்றல், கை கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

அவரைக்காயில் அளவுக்கு அதிகமாக உள்ள அமினோ அமிலம் தான் அந்த தனிச் சுவையைக் கொடுக்கிறது.இந்த அட்டகாசமான சுவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்து மன அழுத்தத்தைப் போக்குகிறது.
அவரைக்காயில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பல சத்துக்கள் அடங்கி உள்ளன. இந்த சத்துக்களால் சீரான ரத்த ஓட்டம் நாம் பல நன்மைகளை நமக்கு கிடைக்கிறது.
       

முருங்கைக்காய் மருத்துவ பயன்கள்

முருங்கைக்காய் பொதிந்து கிடக்கும் மருத்துவ பயன்கள்

Drumstick tree (முருங்கை) Health Benefits
முருங்கைக்காய் அதிக சத்து நிறைந்த காயாகும். முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.

சுவாச பிரச்சனைகள்

ஆஸ்துமா, பிராங்கட்டிஸ் போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய் சிலருக்கு ஏற்படுகிறது. மேலும் ஜுரம் ஏற்படுவதால் சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் இரும்பு சத்து நிறைந்துள்ள முருங்கைக்காயை பக்குவம் செய்து தினமும் சாப்பிடுவதால் நுரையீரலுக்கு அதிகம் பிராணவாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க முடிகிறது. நுரையீரலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

நீரிழிவு நோயில் டைப் 2

நீரிழிவு நோயில் டைப் 2 வகை நீரிழிவு நோய் சற்று கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் ஒரு நோயாக இருக்கிறது. முருங்கைக்காயில் இருக்கும் வேதிப்பொருட்கள் இந்த வகையான நீரிழிவு நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்கும் ஒரு இயற்கை உணவாக முருங்கைக்காய் இருக்கிறது.
முருங்கைக்காய் அதிகளவு விட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் முருங்கையில் விட்டமின்கள் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்னோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.
இதில் தாதுஉப்புக்கான கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், குறைந்த எரிசக்தி, அதிகளவு நார்சத்து, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. போன்றவைகள் உள்ளன.
முருங்கையில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை, நாட்டு முருங்கை, செடிமுருங்கை என பலவகைப்படும். இதில், நாட்டு முருங்கை மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடி முருங்கையில் காய்கள் சற்று சதைபற்றுடன் இருக்கும்.

முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள்

1. முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
2. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.
3. வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.
4. குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
5. மேலும் மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
6. முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் காணப்படுகிறது. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகின்றன.
7. முருங்கைக்காயானது தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் வல்லது.
8. ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.
9. முருங்கைக்காய் தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.
10. முருங்கைகாயில் செரோடோனின், டோபமைன் மற்றும் நோரர்டேன்லைன் போன்றவை உள்ளன. இவை நினைவாற்றல், மனநிலை மற்றும் உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
11. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் முருங்கை பூ, முருங்கை இலை அதிக அளவில் சாப்பிடும் பொழுது நரம்புகளுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும்.
12. முருங்கை பூ மற்றும் காயை உண்ணும்பொழுது நியாபக மறதியை போக்கி, நினைவாற்றலைத் தூண்டும்.

முள்ளங்கி மருத்துவ பயன்கள்


முள்ளங்கி Radish

முள்ளங்கிக் கிழங்கின் (தாவர வகைப்பாடு : Raphanus sativus) இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
தினந்தோறும் முள்ளங்கியை கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
எப்படிப்பட்ட மூல நோயையும் தினந்தோறும் முள்ளங்கி காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.
முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது.
சரும வியாதிகளுக்கு மகத்துமான நன்மைகளை தருகிறது சரும வியாதிகள். படர்தாமரை நோய். முகத்தில் உள்ள கருப்புள்ளிகள், தேமல், மங்கு, எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீதும் முள்ளங்கி விதைப்பசையைத் தடவினால் குணமாகும்

முள்ளங்கி விதையில் ஒரு வகையான பிளீச்சிங் பொருள் இருக்கிறது. அதுவே, தோல் தொடர்பான நோய்களையும் குணமாக்குகிறது.

முள்ளங்கி ஜூஸைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்

சமைக்காத மற்றும் சமைத்த முள்ளங்கியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் எடையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். ஆனால் முள்ளங்கியை பச்சையாக அப்படியே சாப்பிடுவதை விட, ஜூஸ் வடிவில் உட்கொள்வது மிகவும் சிறந்த வழி. இதற்கு காரணம், முள்ளங்கியை ஜூஸ் வடிவில் எடுப்பதன் மூலம், உடலால் அதில் உள்ள சத்துக்களை வேகமாகவும் எளிதாகவும் உறிஞ்ச முடியும். முள்ளங்கி ஜூஸில் வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட் அமிலம், காப்பம், ஜிங்க், மாங்கனீசு போன்றவை வளமாக உள்ளது.
முள்ளங்கி ஜூஸ் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். குறிப்பாக சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் போன்றவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள், வைரஸ்கள் போன்றவற்றை வெளியேற்ற உதவும்.
முள்ளங்கி ஜூஸ் பித்த நீரின் அளவை சீராக்கி, பிலிரூபின் உற்பத்திக்கு உதவி, செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.
கல்லீரலில் உள்ள அதிகப்படியான அளவில் இருக்கும் பிலிரூபினை வெளியேற்றி, மஞ்சள் காமாலையில் இருந்து முள்ளங்கி ஜூஸ் விடுவிக்கும்.
முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளது. ஆய்வுகளிலும், முள்ளங்கி ஜூஸ் வயிறு, குடல், சிறுநீரகம் போன்ற இடங்களில் வரும் புற்றுநோய்களைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து, அதை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
1/2 கப் முள்ளங்கியில் 1 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடை குறைப்பிற்கு சிறந்தது. ஒருவர் நார்ச்சத்து எடுக்கும் அளவை அதிகரித்தால், அது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்போர், ஸ்நாக்ஸ் வேளையில் முள்ளங்கி ஜூஸைக் குடித்து வாருங்கள்.

முள்ளங்கி ஜூஸ் தயாரிப்பது எப்படி?

மஞ்சள் பூசணிக்காய் மருத்துவ குணங்கள்

மஞ்சள் பூசணிக்காய் மருத்துவ பயன்கள்


பரங்கி பரவலாக விளையக்கூடிய ஒரு காய். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய் 4-6 கிலோ எடை கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு இப்படியொரு நிறத்தைக் கொடுப்பது, அதன் தோல் மற்றும் உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்றதாகவும் இருக்கும். இதன் உள் பகுதியில், சின்ன சின்ன வெள்ளை நிறமுடைய விதைகள் ஒன்றோடு ஒன்று வலைபோலப் பின்னிப் பிணைந்திருக்கும்.
மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம்.

வைட்டமின் ஏவை அபரிமிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் (Mucous Membrances) பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.
இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது. Zeaxanthin என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது. பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் (Carotenoids) அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம். தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய்.

பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.

மலச்சிக்கல்

உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறதா? என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட முடியவில்லையா? அப்ப மஞ்சள் பூசணி ஜூஸை தினமும் குடியுங்கள். ஏனெனில் மஞ்சள் பூசணியில் உள்ள மலமிளக்கும் பண்புகள் மலச்சிக்கலைத் தடுப்பதோடு, வயிற்றுப் போக்கு பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.

வாழை தண்டு மருத்துவ பயன்கள்

வாழை தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள். வாழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வ...